2023 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள சங்கம் நிகழ்ச்சிகள், ஏகாந்தவாச தியான நிகழ்வுகள், மற்றும் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளின் சுற்றுப்பயணத் திட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். முழுமையான அட்டவணையை இங்கே காணவும்.
பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம அனுபூதி போதனைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு வருகை தருகின்றனர். பரமஹம்ஸரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள், ஒய் எஸ் எஸ் யோக உத்திகளை மறுஆய்வு செய்தல், கூட்டுத் தியானங்கள், கீதம் இசைத்தல், ஆடியோ-விஷுவல் விளக்கக்காட்சிகள் மற்றும் கிரியா யோக தீட்சை நிகழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உத்வேகமூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் வார இறுதி ஏகாந்தவாச தியான நிகழ்வுகளை அவர்கள் நடத்துகிறார்கள்.
சொற்பொழிவு சுற்றுப்பயணங்கள், புதியவர்களுக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு ஒரு அறிமுகத்தையும், பாட மாணவர்களுக்கு ஒய் எஸ் எஸ் தியான உத்திகளில் ஆழமான வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பிராந்திய ஏகாந்தவாச தியான நிகழ்வுகள் ஒய் எஸ் எஸ் தியான உத்திகள் குறித்த வகுப்புகள் மற்றும் கூட்டுத் தியானம் மற்றும் சத்சங்கத்திற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் பல முக்கிய அம்சங்கள் இந்த நிகழ்ச்சிகளில் உள்ளடங்கியுள்ளன, அவையாவன:
- அன்றாட வாழ்வில் தியானத்தின் முக்கியத்துவம்
- மேலும் இணக்கமானதொரு வாழ்க்கையை வாழ்வது எப்படி
- வெளிப்புறத் தேவைகளுடன் உள் தேவைகளை சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ளுதல்


அமைதியின் உள் கோவிலைக் கட்டுவதற்கு நம்மை ஊக்குவித்து, நமது அன்புக்குரிய குருதேவர் கூறினார்: “உங்கள் மனதின் நுழைவாயில்களுக்குப் பின்னால் உள்ள அமைதியின் கண்டுபிடிப்புக்கு என்ன மகிழ்ச்சி காத்திருக்கிறது என்று, எந்த மனித நாவினாலும் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் தியானம் செய்து அந்த சூழலை உருவாக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்பவர்கள் அற்புதமான உள் அமைதியை உணர்கிறார்கள்.” இந்த நிகழ்ச்சிகள், உண்மையான சாதகர்களுக்கு அன்றாட வாழ்க்கையின் இடைவிடாத செயல்பாட்டிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கி, அக அமைதியின் மீது கவனம் செலுத்தி, அதன் மூலம் இறைவனின் அமைதி மற்றும் பேரின்பத்தின் அமிர்தத்தை பருக ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகின்றன.
எதிர்வரும் சன்னியாசிகள் சுற்றுப் பயணங்கள் மற்றும் ஏகாந்த வாச நிகழ்வுகள், ஜனவரி–ஜூன் 2023
பஞ்சாப் |
மார்ச் 11-12 |
லூதியானா |
இரண்டு நாள் நிகழ்ச்சி |
உத்தரகண்ட் |
மார்ச் 18-19 |
டேராடூன் |
இரண்டு நாள் நிகழ்ச்சி |
ஏப்ரல் 21-23 |
துவாரஹாத் |
ஏகாந்தவாச நிகழ்ச்சி |
|
உத்தரப் பிரதேசம் |
மார்ச் 31-ஏப்ரல் 2 |
நொய்டா |
ஏகாந்தவாச நிகழ்ச்சி |
ஏப்ரல் 28-30 |
நொய்டா |
ஏகாந்தவாச நிகழ்ச்சி |
|
அஸ்ஸாம் |
ஏப்ரல் 1 - 2 |
குவஹாத்தி |
இரண்டு நாள் நிகழ்ச்சி |
ஒடிசா |
ஏப்ரல் 2 |
பிரம்மபூர் |
ஒரு நாள் நிகழ்ச்சி |
ஏப்ரல் 7 |
சம்பல்பூர் |
ஒரு நாள் நிகழ்ச்சி |
|
பீகார் |
ஏப்ரல் 9 |
முசாபர்பூர் |
ஒரு நாள் நிகழ்ச்சி |
நேபாளம் |
ஏப்ரல் 14-16 |
கோபுண்டோல் |
கிரியா யோக தீட்சை உட்பட |
ஏப்ரல் 19 |
பொக்காரா |
ஒரு நாள் நிகழ்ச்சி |
|
இமாச்சலப் பிரதேசம் |
மே 7 |
குளு |
ஒரு நாள் நிகழ்ச்சி |
மே 12-14 |
சிம்லா |
கிரியா யோக தீட்சை உட்பட |
ஜனவரி – ஜூன் 2023 வரையிலான சன்னியாசிகள் சுற்றுப்பயணங்களின் விவரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.